தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் , நேற்று மழை பாதிப்பு சற்றே குறைந்து காணப்பட்டது . கடந்த 3 நாட்களாக மும்பை , தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது . தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் , பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன . அதே சமயம் மும்பை , தானே , பால்கர் , வடக்கு கொங்கன் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரளாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் அதிதீவிர கனமழையால் , முக்கிய அணைகள் , ஆறுகள் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் , தொடர் மழையாலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . கர்நாடகாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் , பெங்களூரு , மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது . மழை நீடிப்பதால் , கே . ஆர் . எஸ் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது . எனவே , கபினி மற்றும் கே.ஆர்.எஸ் . அணைகளில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . குடகு மற்றும் வயநாட்டில் தொடர்ந்து மழை நீடித்தால் , தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
TAMiLN.COM YouTube Channel we talk about everything. Our motive is sharing our knowledge to everyone through in this platform.
Tirukkuṛaḷ - திருக்குறள்
Friday, August 7, 2020
தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
-
குறள் 221: "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து." மு.வரதராசனார் உரை: வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்...
-
தமிழக பட்ஜெட்:தமிழக பட்ஜெட் இன்று (பிப். ,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை: தமிழக பட்ஜெட் இன்று (பிப். ,14) சட்டசபையில...
-
SBI Cards IPO is expected to be launched between March 2-5, 2020 SBI Cards IPO is expected to be set between Rs 745-775 per share.. ...
-
குறள் 425: "உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு." மு.வரதராசனார் உரை: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அ...
-
குறள் 474: "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்." மு.வரதராசனார் உரை: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வ...
No comments:
Post a Comment