தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் , நேற்று மழை பாதிப்பு சற்றே குறைந்து காணப்பட்டது . கடந்த 3 நாட்களாக மும்பை , தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது . தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் , பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன . அதே சமயம் மும்பை , தானே , பால்கர் , வடக்கு கொங்கன் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரளாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் அதிதீவிர கனமழையால் , முக்கிய அணைகள் , ஆறுகள் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் , தொடர் மழையாலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . கர்நாடகாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் , பெங்களூரு , மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது . மழை நீடிப்பதால் , கே . ஆர் . எஸ் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது . எனவே , கபினி மற்றும் கே.ஆர்.எஸ் . அணைகளில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . குடகு மற்றும் வயநாட்டில் தொடர்ந்து மழை நீடித்தால் , தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
TAMiLN.COM YouTube Channel we talk about everything. Our motive is sharing our knowledge to everyone through in this platform.
Tirukkuṛaḷ - திருக்குறள்
Friday, August 7, 2020
தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
-
குறள் 119: "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்." மு.வரதராசனார் உரை: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உற...
-
குறள் 129: "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு." மு.வரதராசனார் உரை: தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும...
-
Flipkart sell back Scheme | Flipkart Sell Back in Tamil | How to sell old Mobile on Flipkart | பிளிப்கார்ட் புதிய 'செல்பேக்' |...
-
குறள் 141: "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்." மு.வரதராசனார் உரை: பிறனுடைய உரிமையாகிய மனைவியை ...
-
குறள் 109: "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்." மு.வரதராசனார் உரை: முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் ...
No comments:
Post a Comment