Tirukkuṛaḷ - திருக்குறள்

Showing posts with label Daily News Post Social Media Info. Show all posts
Showing posts with label Daily News Post Social Media Info. Show all posts

Saturday, August 15, 2020

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக இன்று செங்கோட்டையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு அமைப்பு

படத்திலிருப்பது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக இன்று செங்கோட்டையில் நிறுவப்பட்ட பாதுகாப்பு அமைப்பு தான் இது.

இந்திய பிரதமர் மீது தாக்குதல் நடத்த எதிரிகளின் ட்ரோன்கள் வானில் பறந்து வரும்போது அதை 3 கிலோமீட்டர் தொலைவிலேயே கண்டறிந்து அதை ஜாம் செய்யும் திறன் பெற்றது இந்த ஆயுதம்.

மேலும் எதிரியின் ட்ரோன் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு பிரதமரை நெருங்கி விட்டால் அந்த ட்ரோன் மீது லேசர் கதிர் வீச்சுகளை பாயச் செய்து அந்த ட்ரோனை கீழே விழ வைக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றது இந்த ஆயுதம்.

 இந்த ஆயுதத்தை இந்தியாவின் DRDO உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரித்தது என்பது இந்தியர்கள் பெருமைப்படக் கூடிய ஒரு செய்தியாகும்.

ஜெய்ஹிந்த்.


Saturday, August 8, 2020

டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?#TabletopRunways #Pilots

டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?
கோழிக்கோடு: டேபிள் டாப் விமான ஓடுபாதைகள் எப்போதுமே ஆபத்தானவை.. சவாலானவை. கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையும் அப்படியான ஒன்றுதான்.

நாம் இத்துடன் இணைத்துள்ள, கோழிக்கோடு விமான நிலைய ஓடு பாதையின் சாட்டிலைட் புகைப்படத்தை பாருங்கள். பார்க்கும் உங்களுக்கே பகீரென்று இருக்கிறதா..? ஆனால் இங்குதான் விமானங்கள் தரையிறங்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில், ஓடு பாதை வழுக்கும் தன்மையோடு இருக்கும்போது, இதில் விமானத்தை தரையிறக்கி, அதை நிறுத்துவது எவ்வளவு சிரமமா இருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

பக்கவாட்டு பகுதி அனைத்தும், பெரிய பள்ளம். சுமார் 200 அடி ஆழம் இருக்குமாம். மேலே ஒரு ஓடு பாதை. இப்படித்தான் இருக்கிறது கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடு பாதை பகுதி. எனவேதான், இதை டேபிள் டாப் ஓடுபாதை என்று அழைக்கிறார்கள். டேபிள் மாதியே ஒரு தோற்றம் இருப்பதால்தான் அந்த பெயர்.

அனைத்து விமான நிலையங்களிலும் ஓடு பாதை முடிந்ததும், சற்று தூரம் புல்வெளி போன்ற பரப்பு இருக்கும். ஒருவேளை, விமானம் வழுக்கிக் கொண்டு ஓடினாலும், அங்கே கட்டுப்பாடு கிடைக்கும். ஆனால், இந்த ஓடு பாதையை பார்த்தாலே தெரிகிறது, வழுக்கினால், அதற்கு மேல் வாய்ப்பே கிடையாது என்பது.

Friday, August 7, 2020

தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில் , கேரளா , மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது . 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மகாராஷ்டிராவில் , நேற்று மழை பாதிப்பு சற்றே குறைந்து காணப்பட்டது . கடந்த 3 நாட்களாக மும்பை , தானே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது . தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் , பல இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளித்தன . அதே சமயம் மும்பை , தானே , பால்கர் , வடக்கு கொங்கன் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கேரளாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் அதிதீவிர கனமழையால் , முக்கிய அணைகள் , ஆறுகள் போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் , தொடர் மழையாலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது . கர்நாடகாவிலும் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் , பெங்களூரு , மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது . மழை நீடிப்பதால் , கே . ஆர் . எஸ் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது . எனவே , கபினி மற்றும் கே.ஆர்.எஸ் . அணைகளில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது . குடகு மற்றும் வயநாட்டில் தொடர்ந்து மழை நீடித்தால் , தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.

சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் கேட்க உள்ளது.
China விற்கு எதிராக India வியூகம்.. 6 Satellites வேண்டும்!

இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் உள்ளது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.

இதனால் அந்த இடங்களில் மட்டும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் முழு கவனத்துடன் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது

சீனா படை

இந்த நிலையில் சீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம் மொத்தம் 6 தனி சாட்டிலைட்களை மத்திய அரசிடம் அவசரமாக கேட்டு உள்ளது. அதாவது ராணுவ பயன்பாட்டிற்கு மட்டும் என்று கூறி 4-6 சாட்டிலைட்கள் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு உள்ளது. சீனாவின் படைகள் எங்கே செல்கிறது. எங்கே குவிக்கப்படுகிறது என்பதை கண்காணிக்கும் பொருட்டு இந்த சாட்டிலைட்களை மத்திய அரசு கேட்டுள்ளது.


இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த மே மாதம் இறுதியில் லடாக் எல்லையில் திடீர் என்று 40000 வீரர்களை சீனா களமிறக்கிறது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் வேகமாக லடாக் எல்லையில் சீனா படைகளை களமிறக்கியது. இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில் 4000 கிமீ எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா தனது படைகளை களமிறக்கியது.

இதை இந்தியாவால் சரியாக கணிக்க முடியவில்லை. போதுமான சாட்டிலைட் தகவல்கள் இல்லாத காரணத்தால் கடைசி நேரத்தில்தான் சீனாவின் படை குவிப்பை கண்டுபிடிக்க முடிந்தது. ராணுவத்திற்கு என்று தனியாக நிறைய சாட்டிலைட்கள் இருந்தால் இப்படி நடந்திருக்காது. முறையான சாட்டிலைட் இருந்தால் சீனாவின் படை குவிப்பை முன்பே இந்திய ராணுவம் கணித்து இருக்கும்.

வியூகம்

இந்த நிலையில் இதற்காகவே தற்போது இந்திய பாதுகாப்பு படை 6 சாட்டிலைட்கள் கேட்கிறது. வீரர்களை கண்காணிக்கும் வகையில் துல்லியமான கேமராக்கள் கொண்ட ராணுவத்திற்கு மட்டும் என்று பயன்படும் வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சாட்டிலைட்களை கேட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த சென்சார்கள் இதில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றும் இந்திய பாதுகாப்புத்துறை சார்பாக கேட்கப்பட்டுள்ளது .



இந்தியாவிடம் ஏற்கனவே ராணுவ பயன்பாட்டிற்கான சாட்டிலைட்கள் உள்ளது. ஆனால் இந்த சாட்டிலைட்கள் சீனாவின் ஆக்கிரமிப்பை முழுவதாக கண்டுபிடிக்க உதவவில்லை. சமயங்களில் நாம் தனியார் டேட்டாக்களை நம்ப வேண்டி உள்ளது. இதை தடுக்கும் வகையில் தற்போது இந்திய பாதுகாப்பு துறை மொத்தமாக 4-6 சாட்டிலைட்களை கேட்டு இருக்கிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு .

அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு 
#USBanChineseApps #UsBanTikTok #USBanWechat #USBanTiktokWeChat #USPresidentTrump #Trumpsignsbaningorder
அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செல்போன் செயலிகளுக்கு தடை: அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு 
சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த தனித்தனியாக இரு தடை உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும்.
சீனாவின் டிக்டாக், வீசாட் உள்பட 106 செல்போன் செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இந்தியா முதன்முதலில் தடை விதித்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரி்க்க அரசும், குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் வெகுவாகப் பாராட்டினர்.
 அமெரிக்காவிலும் விரைவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்திருந்த நிலையில் நேற்று தடை உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவுகுறித்து அதிபர் ட்ரம்ப் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.
 இந்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட செயலியின் செயல்பாட்டை பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் தேவை இருக்கிறது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது.
 அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்வற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும்.
இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த தடை உத்தரவை அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன்.
அதேபோல சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீசாட் சமூக வலைத்தளம், மற்றும் பணம் அணுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
டிக்டாக், வீசாட் இரு செயலிகளும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை தானாகவே எடுத்துக்கொள்ளக் கூடியவை. அமெரிக்கர்கர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுபவை. இரு உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்குவரும்.

Tuesday, August 4, 2020

Hyundai Showroom Adopts Street Dog, Makes Him Car Salesman! #Hyundai #Hyundaishowroom #DogMakesCarSalesman

Viral: Hyundai Showroom Adopts Street Dog, Makes Him Car Salesman
Tucson Prime is a street dog who has been adopted by a Hyundai showroom in Brazil.
Imagine walking into a showroom and being greeted by their employee of the year - a dog. That is exactly the role that Tucson Prime, a street dog adopted by a Hyundai showroom, fulfills with aplomb. The heartwarming story of Tucson Prime has won thousands of hearts after going viral on social media recently. However, contrary to some reports, the incident has not taken place in India. 
Tucson is a street dog who was often seen hanging out near a Hyundai car showroom in Brazil. The adorable dog soon made friends with employees of the showroom, who inducted him into their family and made him an honorary employee - complete with his own ID card. 
According to World of Buzz, the good dog has just been promoted to a car salesman after being adopted in May this year. Now, he can be seen guarding the Hyundai showroom in Description
Serra in the state of Espirito Santo, Brazil.
Tucson Prime's story gained viral attention after it was shared on Instagram by Hyundai Brazil three days ago. "Meet Tucson Prime, the sales dog at the Hyundai Prime dealership," the automotive manufacturer wrote while introducing their newest employee on Instagram. "The new member is about a year old, was welcomed by the #Hyundai family and has already won over co-workers and customers," they said.
Photos of Tucson looking every bit the distinguished employee have captured hearts on Instagram, collecting nearly 30,000 'likes'.

In fact, the former street dog has become something of a social media celebrity. His own Instagram account has over 28,000 followers. Photos shared on the account show Tucson working hard to earn a living - attending meetings, greeting important Hyundai executives and demanding belly rubs.

Friday, July 31, 2020

BS-IV வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை!

BS-IV வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதிக்கிறது. 
கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் விற்பனை செய்வதிலும் இது அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.
நீதிபதி அருண் சர்மா தலைமையிலான எஸ்சி பெஞ்ச், "பூட்டப்பட்ட காலத்தில் அசாதாரணமான பிஎஸ்-ஐவி வாகனங்கள் விற்கப்பட்டன" என்று கூறினார். இந்த விவகாரம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி விசாரிக்கப்படும்.


ஆட்டோ டீலர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவில், எஸ்.சி ஜூலை மாத தொடக்கத்தில் மார்ச் 27 ஆம் தேதி உத்தரவிட்டதை நினைவு கூர்ந்தது, கார் டீலர்கள் தங்கள் விற்கப்படாத பிஎஸ்-ஐவி வாகனங்களை பூட்டுதல் முடிந்த 10 நாட்களுக்கு விற்க அனுமதித்தது. ஜூன் மாதத்தில் ஆட்டோ டீலர்ஸ் கூட்டமைப்பை (FADA) இழுத்து, தளர்வு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக எச்சரித்த உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு இந்த முடிவு நெருங்கியது.


1.05 லட்சம் பிஎஸ்-ஐவி வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய அனுமதித்த போதிலும், மார்ச் 27 க்குப் பிறகு 2.55 லட்சம் பிஎஸ்-ஐவி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. பி.எஸ்-ஐவி வாகனங்களை விற்பனை செய்வதற்கும் பதிவு செய்வதற்கும் காலக்கெடுவை 15 நாட்களுக்கு பூட்டிய பின் நீட்டிக்க வேண்டும் என்று ஃபடா உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியது.

ஜூலை 8 ம் தேதி, விற்கப்பட்ட பிஎஸ்-ஐவி வாகனங்கள் குறித்த விவரங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு மேலதிக சரிபார்ப்புக்காக சமர்ப்பிக்க எஸ்.சி கார் விற்பனையாளர்கள் சங்கம் ஃபாடாவிற்கு உத்தரவிட்டது. இதுபோன்ற 17,000 வாகனங்களின் விவரங்கள் வஹான் போர்ட்டலில் பதிவேற்றப்பட்டதை பெஞ்ச் கவனித்தது, அதன் உத்தரவு பதிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே பாதுகாக்கும் என்று எச்சரித்தது