Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, February 21, 2020

தங்கம் வரலாறு காணாத உச்சம்.... கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது!!! நகை வாங்குவோர் பரிதவிப்பு...

தங்கம் வரலாறு காணாத உச்சம்.... கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது!!!



சென்னையில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. முதல்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் விலையும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்.21) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,012-க்கும், சவரன் ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.42,110க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.
விலை ஏற்றம் ஏன்?

உலகளவில் தங்கத்தின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டதாலும், தங்கத்தின் மீதான தேவை மற்றும் அதன் மீதான முதலீடு அதிகரித்திருப்பது காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment