Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, February 26, 2020

சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின், 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கியமான 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ மிகச் சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருந்தார். 'வம்சி' பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டது.

சங்க காலப் பாணர், கூத்தர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டது. இந்த நாவலை சிறப்பாக மொழிபெயர்த்த எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ.50 ஆயிரம் ரொக்கமும், செம்புப் பட்டயமும் விருதாக அளிக்கப்படும். விருது வழங்கப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை.இவருக்கு எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment