Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, February 5, 2020

தஞ்சை பெரிய கோவில் ராஜகோபுரத்திற்கு வெகு விமரிசையாக நடைபெற்றது...TanjoreBigTemple Kumbabishekam


தஞ்சை பெரிய கோவில் ராஜகோபுரத்திற்கு c வெகு விமரிசையாக நடைபெற்றது...
 
TanjoreBigTemple #தஞ்சைபெரியகோவில்குடமுழுக்கு #தஞ்சை_பெரியகோவில்


மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழர்களின் கட்டிடக்கலையை உலகெங்கும் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு  நடைபெற்றது. ராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

TanjoreBigTemple #தஞ்சைபெரியகோவில்குடமுழுக்கு #தஞ்சை_பெரியகோவில்



தஞ்சையில் அமைந்துள்ளது பிரகதீஸ்வரர் கோவில் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில். கி.பி.1000ஆவது ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதோடு அறிவியல், விஞ்ஞானம், கலை மற்றும் பண்பாட்டு பொக்கிஷமாக கருதப்படுகிறது.
 

TanjoreBigTemple #தஞ்சைபெரியகோவில்குடமுழுக்கு #தஞ்சை_பெரியகோவில்


தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் விமானத்தில் கலசநீர் ஊற்றப்பட்டது.


மாலை 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும், 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும் நடைபெறுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 5,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

குடமுழுக்கையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


 
 

No comments:

Post a Comment