TAMiLN.COM YouTube Channel we talk about everything. Our motive is sharing our knowledge to everyone through in this platform.
Tirukkuṛaḷ - திருக்குறள்
Sunday, August 16, 2020
பங்குச் சந்தை என்றால் என்ன? | What is share market | what is share | IPO | Stocks
பங்குச்சந்தை என்றால் என்ன?
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை எனப்படுவது போல, பங்குகளை வாங்கவும்
விற்கவுமான இடமே பங்குச் சந்தை எனப்படும். ஆனால், காய்கறிக்கோ, மற்ற பொருட்களுக்கோ
தேவைப்படுவது போல, பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட
இருப்பிடம்(Physical presence) தேவையில்லை. கணிணி
மூலமாகவும், முகவர்கள்(Brokers) மூலமாகவும்
பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இன்றைய தேதியில் உலகப் பொருளாதாரம்
பங்குச்சந்தையைப் பெரும்பாலும் சார்ந்துள்ளது.
எனவே பங்குச் சந்தையைப் பற்றி
நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதாகிறது.
நீங்கள் ஒரு தொழில் தொடங்க விரும்புகிறீர்கள். அதற்கு, மூலதனம்(capital)
தேவையல்லவா? தொழில், சிறிய அளவில்
இருக்குமானால், உங்கள் கைப்பணத்தைப் போட்டால் போதுமானது. அதுவே
சற்றுப் பெரிய அளவில் இருக்குமானால், உங்கள் கைப்பணம்
போதாமல்,
கொஞ்சம் வெளியில்
கடன் வாங்குவீர்கள். மிகப் பெரிய அளவில் நடைபெறும் தொழில் அல்லது வியாபாரமானால், தேவைப்படும்
மூலதனத்தைத் திரட்ட நீங்கள் பங்குகளை வெளியிடலாம். அதாவது, இதன் மூலம், பொதுமக்கள் பலரும்
உங்கள் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாகின்றனர்.
உதாரணமாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதைப் பத்து ரூபாய்
முக மதிப்புள்ள(Face value) 10 லட்சம்
பங்குகளாக்கி, பொது மக்களிடம் விற்கலாம். பொதுமக்கள் தமது
வசதிக்கேற்ப, அப்பங்குகளில் முதலீடு செய்வர்..
இதனால் என்ன பயன்?
நிறுவனதாரர், தமது கைப்பணத்தையோ, கடன் வாங்கிய
பணத்தையோ முதலீடு செய்தால், நட்டமோ லாபமோ அவரை மட்டுமே சார்ந்தது.
ஆனால்,
பங்குகளை
வெளியிடுவதன் மூலம், நட்டம் லாபம் இரண்டுமே பங்குதாரர்களுடன்
பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வாங்கிய தொகைக்கு வட்டி எதுவும் கிடையாது. லாபம்
வந்தால்,
பங்காதாயம் ( dividend)
கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
இப்போ முதல் முறையா ஒரு கம்பெனி வந்து ஷேர் மார்க்கெட்டில் பங்கு
வெளியிடுறாங்க அப்படின்னா அதுக்கு பேருதான் IPO அதாவது Initial
Public Offering அப்படின்னு சொல்லுவாங்க
பங்குகளை
வெளியிட்டபின், அந்நிறுவனம், தனி நபருக்குச்
சொந்தமானது என்ற நிலையில் இருந்து மாறி, பங்கு நிறுவனம்
ஆகிவிடுகிறது.
பங்குச் சந்தையில் யார் வேலை செய்கிறார்கள்?
வர்த்தகர்கள், பங்கு தரகர்கள், போர்ட்ஃபோலியோ
மேலாளர்கள், பங்கு ஆய்வாளர்கள் மற்றும் முதலீட்டு
வங்கியாளர்கள் உட்பட பங்குச் சந்தையுடன் தொடர்புடைய பல்வேறு வீரர்கள் உள்ளனர்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான பங்கு உண்டு.
பங்குச்சந்தை எப்போது தோன்றியது என்ற விவரத்தை அறிந்துகொள்ளலாம்.
14ஆம் நூற்றாண்டில், வெனிஸ் நகர
ஆட்சியர்கள், தாம் பிற நாடுகளில் வாங்கிய கடன்களைத்திருப்பித்
தர வசதியில்லாததால், மக்களிடையே கடன் பத்திரங்களை வினியோகித்தனர்.
அப்பத்திரங்கள் வியாபாரிகளாலும், நில
உரிமையாளர்களாலும் வாங்கி, விற்கப்பட்டன.
பின் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், இத்தகைய
பத்திரங்களை அரசின் பற்றாக்குறைகளின் போது வெளியிடத்தொடங்கின.
பின், 1693ம் ஆண்டு தொடங்கி, லண்டனில் இவ்வகைப்
பத்திரங்களை அரசும், பிற பெரு நிறுவனங்களும் வெளியிட்டன.
அதை வாங்கி, விற்க விரும்பியவர்கள், அதற்கான முகவர்கள்
ஆகியோர்,
உணவகங்களில்
கூடினர்.
நாள்பட, நாள்பட பரிவர்த்தனைகள் அதிகரித்தபின்னர்,
1773ல்
முதன்முதலில் முகவர்கள் அனைவரும் 'விற்பனைக்கான கழகம்
ஒன்றைத் துவங்கினர்.
1801ல் லண்டனில் வசித்த முகவர்கள் 20000 பவுண்டுகளைத்
திரட்டி 'லண்டன் ஸ்டாக்
எக்ஸ்சேஞ்ச்' ஐத் தொடங்கினர்.
இதே சமயத்தில் அமெரிக்காவிலும் இத்தனைய பங்குவர்த்தக நடவடிக்கைகள்
தொடர்ந்தன.
1817ல் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் துவங்கப்பட்டது.
இவையிரண்டுமே உலகின் மிகப் பழமையான பங்கு வர்த்தக சபைகளாகும்.
-
குறள் 80: "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு." மு.வரதராசனார் உரை: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உய...
-
குறள் 79: "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு." மு.வரதராசனார் உரை: உடம்பின் அகத்து உறுப்பாகிய அ...
-
குறள் 81: "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு." மு.வரதராசனார் உரை: வீட்டில் இருந்து பொருள்களைக்...
-
குறள் 361: "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து." மு.வரதராசனார் உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தில...
-
குறள் 68: "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது." மு.வரதராசனார் உரை: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன...